சமயபுரத்தாளே மாரியம்மா அம்மா பாடல்வரிகள்

Kantharaj Kabali
0


அம்மன் பாடல் வரிகள்

Amman Devotional Song Lyrics


சமயபுரத்தாளே மாரியம்மா  -அம்மா 
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
சமயபுரத்தாளே மாரியம்மா  -அம்மா 
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா

    மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம்
    அரிசி மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் வைத்தோம்
சமயபுரத்தாளே மாரியம்மா  -அம்மா 
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா

    துள்ளியே எங்கள் முன்னே வாருமம்மா
    அம்மா தூயவளே என் தாயே மாரியம்மா
சமயபுரத்தாளே மாரியம்மா  -அம்மா 
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா

    பட்டு பீதாம்பரத்தில தாவணியும்
    உனக்கு பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம்
சமயபுரத்தாளே மாரியம்மா  -அம்மா 
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா

    எட்டு திசைகளையும் ஆள்பவளே
    ஈஸ்வரியே என் தாயே மாரியம்மா
சமயபுரத்தாளே மாரியம்மா  -அம்மா 
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா

    கத்தி கதறுகிறோம் கேட்கலையோ
    தாயே கல்லேதான் உன் மனமும் கரையலையோ
சமயபுரத்தாளே மாரியம்மா  -அம்மா 
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா

    உலகமெல்லாம் ஆடுதம்மா உன் சிரிப்பிலே
    அம்மா உமையவளே என் தாயே மாரியம்மா
சமயபுரத்தாளே மாரியம்மா  -அம்மா 
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா

    காலிற் சலங்கை ஒலி காதை துளைக்குதம்மா
    பாவாடை தாவணியும் தானாக ஆடுதம்மா
சமயபுரத்தாளே மாரியம்மா  -அம்மா 
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா

    பூவாடை வீசுதம்மா பூமகளே
    உனக்கு பாமாலை கொண்டு வந்தேன் பாரம்மா

சமயபுரத்தாளே மாரியம்மா  -அம்மா 
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
சமயபுரத்தாளே மாரியம்மா -அம்மா 
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top