திருச்செந்தூர் காவடி சிந்து பாடல்வரிகள் - Thiruchendur Kavadi Sindu Lyrics

Tiruchendur_Murugan

திருச்செந்தூர் காவடி சிந்து
பாடியவர் : சூப்பர் சிங்கர் தன்யஸ்ரீ

செந்தூர் என்றொரு தேசம் – அங்கு

செந்தில் ஆண்டவர் வாசம் – ஒப்பு

இல்லை என சொல்லும்படி

உலகை அவன் காத்தபடி நின்றான்

எனை கொண்டான்


வேலுண்டு வினையில்லை முருகா

வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா


பக்தர்கள் மீதுதான் பாசம் - பணிய

பாவங்கள் ஆகிடும் நாசம் – அந்த

தேவர்கள் துயர் போக்க

சூரனை வதம் செய்த பாலன்

பெரும் வீரன்


வேலுண்டு வினையில்லை முருகா

வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா


ஆதிசங்கரர் நோய் தீர்த்தான் – அவர்

பாடிய புஜங்கம் கேட்டான் – பன்னீர்

இலை கொண்டு தருகின்ற 

விபூதி அணிந்திட்டால் போதும்

நோய் போகும்


வேலுண்டு வினையில்லை முருகா

வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா


குழந்தை வடிவிலே வந்தான் – குமர

குருபரன் வாய்பேசச் செய்தான் – கந்தர்

கலிவெண்பா அவர் பாட

தமிழ் தந்து அருள் செய்து நின்றான்

உள்ளம் மகிழ்ந்தான்


வேலுண்டு வினையில்லை முருகா

வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா


சஷ்டியில் விரதம் இருந்து – அவன்

சன்னதி வந்து தொழுது – பிள்ளை

வரம் கேட்டால் வடிவேலன் 

பிள்ளையாய் வந்தில்லம் பிறப்பான் 

இன்பம் நிறைப்பான்


வேலுண்டு வினையில்லை முருகா

வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா


ஓமெனும் பிரணவ வடிவம் – எங்கள்

ஓராறு முகனின் இல்லம் – மலை 

ஏறும் சுமை கொடுக்காமல்

தரை மீதில் நின்றபடி அருள்வான் 

வினை களைவான்


வேலுண்டு வினையில்லை முருகா

வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா


வேல் வேல் என்று நீ பாடு – வெற்றி

கூடியே வந்திடும் பாரு  - வளர்

பிறைபோல நலம் வளர

பிறை சூடி மகன் வேலன் அருள்வான் 

வளம் தருவான்


வேலுண்டு வினையில்லை முருகா

வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா

~♤~♤~♤~


About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Shiva Song Lyrics

Murugan Devotional Songs Lyrics

.

Lakshmi Devotional Songs Lyrics

.