முத்துக்குமாரனடி அம்மா பாடல்வரிகள் -Muthu Kumaranadi Amma Lyrics

Kantharaj Kabali
0


Murugan Devotional Song Lyrics

முத்துக்குமாரனடி அம்மா அம்மா

முத்துக்குமாரனடி அம்மா

முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா

முத்துக்குமாரனடி அம்மா அம்மா

முத்துக்குமாரனடி அம்மா


மயில் மீது நடமாடி வருவான் முருகன்

மயல் கொண்டு அவனது மலரடி வணங்குவேன்

முத்துக்குமாரனடி அம்மா அம்மா

முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா


வடிவேலை கைகொண்டு வருவான் முருகன்

வந்த வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா

முத்துக்குமாரனடி அம்மா அம்மா

முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா


கோழிக்கொடி கொண்டு வருவான் முருகன்

கொடிய வினைத்தீர்த்திடுவான் அம்மா அம்மா

முத்துக்குமாரனடி அம்மா அம்மா

முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா


வண்ண மயில் மீதேறி வருவான் முருகன்

கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான்

கைவிட்டு விடுவாயோ என்றேன்

கை மேல் அடித்து கைவிடேன் என்றான்

முத்துக்குமாரனடி அம்மா அம்மா

முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா


மெய் கண்ட தெய்வமடி அம்மா முருகன்

மேலான தெய்வம் இவனன்றி உண்டோ

முத்துக்குமாரனடி அம்மா அம்மா


வாழ்வுதனை வளமாக்கி விட்டான் முருகன்

வாழ்கவே வாழ்க வளர்முத்துக் குமரன் 

முத்துக்குமாரனடி அம்மா அம்மா 

முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா

முத்துக்குமாரனடி அம்மா அம்மா

அம்மா அம்மா

அம்மா அம்மா

அம்மா

~♤~♤~♤~


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top