ஆடிவெள்ளிக் கிழமையன்று அம்மனுக்கு மஞ்சள் காப்பு பாடல்வரிகள் - Adi Vellikizhamai Andru Lyrics

Kantharaj Kabali
0


Singer - L.R.Eswari

ஆடிவெள்ளிக் கிழமையன்று
    அம்மனுக்கு மஞ்சள் காப்பு
    ஆதி சக்தி கருமாரி அம்மனுக்கு
    அழகிய மஞ்சள் காப்பு அழகிய மஞ்சள் காப்பு
    கூடி அவளைக் கம்பிடுவோர்க்கு கோடி நன்மைகள் பாடு
    ஆடியில் அவளை கொண்டாடி ஆயிரம் நாமங்கள் கூறு 


ஆடிவெள்ளிக் கிழமையன்று
    அம்மனுக்கு மஞ்சள் காப்பு

வேற்காட்டில் கடியிருக்கும் வேப்பிலைக்காரி
    கூவும் அன்பர் குறைதீர்க்கம் கோவிந்த மாரி
    தாரணியின் தாயவளே நாரணி ஓங்காரி
    பாரெல்லாம் படியளக்கம் பரமசிவன் பாரி 

ஆடிவெள்ளிக் கிழமையன்று
    அம்மனுக்கு மஞ்சள் காப்பு

குங்குமத்தில் குளித்து நிற்பாள் குங்குமக்காரி
    மஞ்சளுடன் நிறைந்திருப்பாள் மங்களமாரி
    நெஞ்சார துதித்து நின்றால் அணைத்திடுவாள் வாரீர்
    அன்னைபோலக் காத்திடுவாள் ஆனந்த சுகுமாரி 

ஆடிவெள்ளிக் கிழமையன்று
    அம்மனுக்கு மஞ்சள் காப்பு

~~*~~*~~*~~

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top