சென்னி குளநகர் வாசன் - Chenni Kula Nagar Vasan Lyrics

Kantharaj Kabali
0

Murugan Kavadi Sindhu Song Lyrics
காவடி சிந்து


சென்னி குளநகர் வாசன், - தமிழ்
          தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்
     செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
          தீரன்; அயில் வீரன்.

வன்ன மயில்முரு கேசன், - குற
          வள்ளி பதம்பணி நேசன் - உரை
     வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற
          வாதே சொல்வன் மாதே!

கோபுரத் துத்தங்கத் தூவி, - தேவர்
          கோபுரத் துக்கப்பால் மேவி, - கண்கள்
     கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு
          குலவும் புவி பலவும்.

நூபுரத் துத்தொனி வெடிக்கும் - பத
          நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் - அங்கே
     நுழைவாரிடு முழவோசைகள் திசைமாசுணம் இடியோ என
          நோக்கும் படி தாக்கும்.

சந்நிதி யில்துஜஸ் தம்பம், - விண்ணில்
          தாவி வருகின்ற கும்பம் - எனும்
     சலராசியை வடிவார்பல் கொடிசூடிய முடிமீதிலே
          தாங்கும்; உயர்ந் தோங்கும்.

உன்னத மாகிய இஞ்சி,-பொன்னாட்டு
          உம்பர் நகருக்கு மிஞ்சி - மிக
     உயர்வானது பெறலால், அதில் அதிசீதள புயல்சாலவும்
          உறங்கும்; மின்னிக் கறங்கும்.

அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
          அந்தத் திருப்புகழ் முழக்கம், -பல
     அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி
          அடைக்கும்; அண்டம் உடைக்கும்.

கருணை முருகனைப் போற்றித்-தங்கக்
          காவடி தோளின்மேல் ஏற்றிக் - கொழும்
     கனல்ஏறிய மெழுகாய்வரு பவர் ஏவரும், இகமேகதி
          காண்பார்; இன்பம் பூண்பார்.



🚩🚩🐓வெற்றி வேல் வீர வேல்🐓🚩🚩

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top