Thiruchendoorin Senthil Muruga Lyrics in Tamil
Singer - K.J.Yesudas
திருச்செந்தூரின் செந்தில் முருகா
இசைக் கோவிலில் குடி கொண்டவா
கடலலையோரம் நின்று அருள்செய்பவா
ஓம் சரவணபவ சரணம்
திருச்செந்தூரின் செந்தில் முருகா
ஓம் சரவணபவ சரணம்
தேவர் வணங்கிட சூரர் பொடிபட
வேலை எறிந்தேகாத்தாய்
மாந்தர் பணிந்தே வேண்டும் வரங்களை
வழங்கியதினம் காத்தாய்
ஞானவேலா ஞானத்தின் தலைவா
ஔவைபோற்றிய மெய்யான தேவா
சிவசக்தி பாலனே வரம் தரவா
திருச்செந்தூரின் செந்தில் முருகா
ஓம் சரவணபவ சரணம்
வண்ணமயில் மீதுஏறி
என் எண்ணம் போலே வருவாய்
பன்னிரு விழிப்பார்வையாலே
அருளை அள்ளித் தந்திடுவாய்
செல்வனே இசை நாதத்தின் ஸ்ருதியே
வீரனே வெற்றிவேல் ஏந்தும் சீலனே
ஐங்கரனின் சோதரனே ஆறுதலை தா
திருச்செந்தூரின் செந்தில் முருகா
இசைக் கோவிலில் குடி கொண்டவா
கடலலையோரம் நின்று அருள்செய்பவா
ஓம் சரவணபவ சரணம்
திருச்செந்தூரின் செந்தில் முருகா
ஓம் சரவணபவ சரணம்
ஓம் சரவணபவ சரணம்'
ஓம் சரவணபவ சரணம்
ஓம் சரவணபவ சரணம்
ஓம் சரவணபவ சரணம்
~~~*~~~