கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி

Kantharaj Kabali
1
Pillaiyar



திருப்புகழ்
Singer - Mahanadhi Shobana

கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணி

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர்
கற்பகம் என வினை கடிதேகும்

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
                                                         
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டு அவிழ் மலர் கொ(ண்)டு பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரி தனில்
முற்பட எழுதிய முதல்வோனே

முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்
அச்சு அது பொடி செய்த அதிதீரா

அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும்
அப்புனம் அதனிடை இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மணம் அருள் பெருமாளே

~~~*~~~


Post a Comment

1 Comments
  1. Thanks.
    Good luck in your endeavours with God's Grace.

    ReplyDelete
Post a Comment

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top