சிந்தித் தவர்க்கருள் கணபதி ஜய ஜய

Kantharaj Kabali
0


பாடல்வரிகள் - ஒளவையார்

Singer -Meera Krishnan


சிந்தித் தவர்க்கருள் கணபதி ஜய ஜய

சீரிய வானைக் கன்றே ஜய ஜய

அன்புடை அமரரைக் காப்பாய் ஜய ஜய

ஆவித் துணையே கணபதி ஜய ஜய


இண்டைச் சடைமுடி இறைவா ஜய ஜய

ஈசன் தந்தருள் மகனே ஜய ஜய

உன்னிய கருமம் முடிப்பாய் ஜய ஜய

ஊர்நவ சந்தி உகந்தாய் ஜய ஜய


எம்பெரு மானே இறைவா ஜய ஜய

ஏழுகுலந் தொழ நின்றாய் ஜய ஜய

ஐயாக் கணபதி நம்பியே ஜய ஜய

ஒற்றை மருப்புடை வித்தகா ஜய ஜய


ஓங்கிய வானைக் கன்றே ஜய ஜய

ஒளவியமில்லா அருளே ஜய ஜய

அக்கர வஸ்த்து ஆனவா ஜய ஜய

கணபதி என்வினை களைவாய் ஜய ஜய


ஙப்போல் மழுவொன் றேந்தியே ஜய ஜய

சங்கரன் மகனே சதுரா ஜய ஜய

ஞய நம்பினார் பாலாடிய ஜய ஜய

இடம்படு விக்கின விநாயகா ஜய ஜய


இணங்கிய பிள்ளைகள் தலைவா ஜய ஜய

தத்துவ மறைதெரி வித்தகா ஜய ஜய

நன்னெறி விக்கின விநாயகா ஜய ஜய

பள்ளியி லுறைதரும் பிள்ளாய் ஜய ஜய


மன்று ளாடும் மணியே ஜய ஜய

இயங்கிய ஞானக்குன்றே ஜய ஜய

அரவக் கிண்கிணி ஆர்ப்பாய் ஜய ஜய

இலகக் கொம்பொன் றேந்தியே ஜய ஜய


வஞ்சனை வலவுந் தீர்ப்பாய் ஜய ஜய

அழகிய ஆனைக் கன்றே ஜய ஜய

இளமத யானை முகத்தாய் ஜய ஜய

இரகுபதி விக்கின விநாயகா ஜய ஜய


~~~*~~~

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top