HomeTamilசரஸ்வதி அந்தாதி - Saraswathi Anthathi Lyrics in Tamil- Part 1 சரஸ்வதி அந்தாதி - Saraswathi Anthathi Lyrics in Tamil- Part 1 Kantharaj Kabali 0 கம்பர் அருளிய சரஸ்வதி அந்தாதிSaraswathi Anthathi Lyrics in TamilPART 1 ( 1-10 )கடவுள் வாழ்த்துஆய கலைகள் அறுபத்து நான்கினையும்ஏய வுணர்விக்கு மென்னம்மை – தூயவுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளேயிருப்பளிங்கு வாரா திடர்.படிக நிறமும் பவளச் செவ்வாயும்கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் – துடியிடையும்அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்கல்லுஞ்சொல் லாதோ கவி.நூல்: கலித்துறைசீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்றார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்பார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்வார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே. 1வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனேபிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கும் உரைப்பவளே. 2உரைப்பா ருரைக்குங் கலைகளெல்லாம் எண்ணில் உன்னையன்றித்தரைப்பா லொருவர் தரவல்ல ரோதண் டரளமுலைவரைப்பா லமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலேவிரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே. 3இயலானதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்குமுயலா மையாற்றடு மாறுகின்றே னிந்த மூவுலகும்செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்குஅயலா விடாம லடியேனையும் உவந்து ஆண்டருளே. 4அருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத் தழகெறிக்கும்திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்இருக்கோ துநாதனுந் தானுமெப் போதுமினி திருக்குமருக்கோல நாண்மல ராள் என்னை யாளு மடமயிலே. 5மயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையேகுயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூ ரிருட்கோர்வெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம்பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனதுபொற் பாதங்களே. 6பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்வேதாந்த முத்தியுந் தந்தருள் பாரதிவெள் ளிதழ்ப்பூஞ்சீதாம் புயத்தி லிருப்பா ளிருப்பவென் சிந்தையுள்ளேஏதாம் புவியிற் பெறலரி தாவதெனக் கினியே. 7இனிநான் உணர்வ தெண்ணெண் கலையாளை இலகுதொண்டைக்கனிநாணுஞ் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலவயன்றனிநாயகியை அகிலாண்ட மும்பெற்ற தாயைமணப்பனிநாண் மலர் உறை பூவையை யாரணப் பாவையையே. 8பாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமாமேவுங் கலைகள் விதிப்பா ளிடம்விதியின் முதியநாவும் பகர்ந்ததொல் வேதங்கள் நான்கு நறுங்கமலப்பூவுந் திருப்பதம் பூவா லணிபவர் புந்தியுமே. 9புந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோவந்தியிற் றோன்றிய தீபமென்கோ நல்லரு மறையோர்சந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோஉந்தியிற் றோன்றும் பிரான்புயந் தோயு மொருத்தியையே. 10~~~☆~~~ Tags Saraswathi Tamil Facebook Twitter Whatsapp Share to other apps சரஸ்வதி அந்தாதி - Saraswathi Anthathi Lyrics in Tamil- Part 1 Saraswathi Newer Older