கோயில் முன்னே கூடி நின்று - குருவாயூரப்பன் பாடல்

Kantharaj Kabali
0


குருவாயூரப்பன் பாடல்


கோயில் முன்னே கூடி நின்று 

கோடி ஜென்ம பாவம் தீர 

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்!


திருமேனி தரிசனம் நிர்மால்யமாகவே கண்டு 

கிரிதரா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்!

திருமேனி தரிசனம் நிர்மால்யமாகவே கண்டு 

கிரிதரா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்!


கோயில் முன்னே கூடி நின்று 

கோடி ஜென்ம பாவம் தீர 

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்


சந்தனக் காப்பு கழற்றி  தைலம் பூசிக் கொண்டு நிற்கும் 

நந்த கோபாலனே நமஸ்காரம் செய்கின்றோம்!


சந்தனக் காப்பு கழற்றி தைலம் பூசிக் கொண்டு நிற்கும் 

நந்த கோபாலனே நமஸ்காரம் செய்கின்றோம்!

சந்தனக் காப்பு கழற்றி தைலம் பூசிக் கொண்டு நிற்கும் 

நந்த கோபாலனே நமஸ்காரம் செய்கின்றோம்!


கோயில் முன்னே கூடி நின்று 

கோடி ஜென்ம பாவம் தீர 

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்


எண்ணெய் ஸ்நானம் செய்து கையில் வாழைப்பழத்தோடு நிற்கும் 

கண்ணன் உன் பாதத்தில் நமஸ்காரம் செய்கின்றோம்!

எண்ணெய் ஸ்நானம் செய்து கையில் வாழைப்பழத்தோடு நிற்கும் 

கண்ணன் உன் பாதத்தில் நமஸ்காரம் செய்கின்றோம்!


கோயில் முன்னே கூடி நின்று 

கோடி ஜென்ம பாவம் தீர 

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்


குடம் குடமாய் பாலை அபிஷேகம் செய்யும் வேளை 

கோவிந்தனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்!

குடம் குடமாய் பாலை அபிஷேகம் செய்யும் வேளை 

கோவிந்தனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்!


கோயில் முன்னே கூடி நின்று 

கோடி ஜென்ம பாவம் தீர 

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்


கொண்டை மயில் பீலி மின்ன மஞ்சள் பட்டு கட்டிக் கொண்டு 

குழலூதும் க்ருஷ்ணா நமஸ்காரம் செய்கின்றோம்!

கொண்டை மயில் பீலி மின்ன மஞ்சள் பட்டு கட்டிக் கொண்டு 

குழலூதும் க்ருஷ்ணா நமஸ்காரம் செய்கின்றோம்!


கோயில் முன்னே கூடி நின்று 

கோடி ஜென்ம பாவம் தீர 

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்


தெச்சி மந்தாரத் துளசி தாமரைப் பூமாலை சாற்றி 

அச்சுதனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்!

தெச்சி மந்தாரத் துளசி தாமரைப் பூமாலை சாற்றி 

அச்சுதனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்!


கோயில் முன்னே கூடி நின்று 

கோடி ஜென்ம பாவம் தீர 

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்


தீரா வினை தீர்த்து வைத்து கோரும் வரம் அளித்திடும் 

நாராயணா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்!

தீரா வினை தீர்த்து வைத்து கோரும் வரம் அளித்திடும் 

நாராயணா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்!


கோயில் முன்னே கூடி நின்று 

கோடி ஜென்ம பாவம் தீர 

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்


~~~*~~~

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top