கந்தன் துணை இருக்க நெஞ்சே பயம் எதற்கு - Kandan Thunai Irukka Lyrics

Kantharaj Kabali
0


Murugan Devotional Song Lyrics

Singer - Seekazhi Govidarajan

கந்தன் துணை இருக்க நெஞ்சே பயம் எதற்கு...

கந்தன் துணை இருக்க நெஞ்சே பயம் எதற்கு,

 தஞ்சம் அடைந்தவர்க்கு கொஞ்சி அருள் கொடுக்கும்!

கந்தன் துணை இருக்க நெஞ்சே பயம் எதற்கு,

 தஞ்சம் அடைந்தவர்க்கு கொஞ்சி அருள் கொடுக்கும்!  

கந்தன் துணை இருக்க நெஞ்சே பயம் எதற்கு...

    

தந்தைக்கு உபதேசம் செய்த குரு நாதன்....

தந்தைக்கு உபதேசம் செய்த குரு நாதன்

தந்தைக்கு உபதேசம் செய்த குரு நாதன்

வந்த வினைத் தீர்ப்பான்  வள்ளி மணவாளன்!

வந்த வினைத் தீர்ப்பான்  வள்ளி மணவாளன்!


கந்தன் துணை இருக்க நெஞ்சே பயம் எதற்கு,      

 தஞ்சம் அடைந்தவர்க்கு கொஞ்சி அருள் கொடுக்கும்! 

கந்தன் துணை இருக்க நெஞ்சே பயம் எதற்கு


ஞாலம் தன்னைக் காக்க ஆறுமுகம் ஆனான்!

நாடும் அடியார்க்கு ஞானப் பழம் ஆனான்!

ஞாலம் தன்னைக் காக்க ஆறுமுகம் ஆனான்!

நாடும் அடியார்க்கு ஞானப் பழம் ஆனான்!


தாசன் அருணகிரி பாசம் மிகவானான்!

தாசன் அருணகிரி பாசம் மிகவானான்!

ஈசன் மனம் மகிழும் இறைவன் அவன் ஆனான்!

ஈசன் மனம் மகிழும் இறைவன் அவன் ஆனான்!


கந்தன் துணை இருக்க நெஞ்சே பயம் எதற்கு,

 தஞ்சம் அடைந்தவர்க்கு கொஞ்சி அருள் கொடுக்கும்!

கந்தன் துணை இருக்க நெஞ்சே பயம் எதற்கு.


~~~ * ~~~

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top