Singer - K.Veeramani
துளசிமணி மாலை அணிந்து
சபரிமலை சென்றிடுவோம்
துளசிமணி மாலை அணிந்து
சபரிமலை சென்றிடுவோம்
தூயவனாம் ஐயப்பனின்
தரிசனமே கண்டிடுவோம்
துளசிமணி மாலை அணிந்து
சபரிமலை சென்றிடுவோம்
பனிமலையின் உச்சியிலே
பதினெட்டாம் படிதனிலே
பரிவுடன் அமைந்திருக்கும்
சாஸ்தாவே சரணம் என்று
துளசிமணி மாலை அணிந்து
சபரிமலை சென்றிடுவோம்
சதாசிவன் மகனின் பதாம்புஜம் பணிந்து
சதா அவன் நினைவில் மனமகிழ்ந்து
சதாசிவன் மகனின் பதாம்புஜம் பணிந்து
சதா அவன் நினைவில் மனமகிழ்ந்து
கணாதிபன் அந்த விநாயகன் தம்பி
குணகரனை அனுதினம் நினைந்து
இணைபடியே நம்பி வந்து
ஐயன் இதயத்திலே நாம் கலந்து
பணிந்து மகிழ்ந்து கனிந்து
விரதமிருந்து இருமுடி சுமந்து
குருவடிவானவன் கருணையை அறிந்து
திருவருள் நிறைந்திடும் சன்னதி வந்திடவே
துளசிமணி மாலை அணிந்து
சபரிமலை சென்றிடுவோம்
பவள மணித் திருமார்பினிலே
பந்தளராஜனின் ஆபரணம்
அவனியெல்லாம் போற்றிடவே
அந்த மணிகண்ட குமரனின் அலங்காரம்
பவள மணித் திருமார்பினிலே
பந்தளராஜனின் ஆபரணம்
அவனியெல்லாம் போற்றிடவே
அந்த மணிகண்ட குமரனின் அலங்காரம்
பலவினைகள் நீங்கிடவே
பகவான் நாமம் பாடிடுவோம்
பலவினைகள் நீங்கிடவே
பகவான் நாமம் பாடிடுவோம்
நம் கவலையெல்லாம் மறந்திடவே
கருணை மழையில் கூடிடுவோம்
துளசிமணி மாலை அணிந்து
சபரிமலை சென்றிடுவோம்
தூயவனாம் ஐயப்பனின்
தரிசனமே கண்டிடுவோம்
துளசிமணி மாலை அணிந்து
சபரிமலை சென்றிடுவோம்