துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்





Singer - K.Veeramani

துளசிமணி மாலை அணிந்து 
சபரிமலை சென்றிடுவோம்


துளசிமணி மாலை அணிந்து 

சபரிமலை சென்றிடுவோம்
தூயவனாம் ஐயப்பனின்
தரிசனமே கண்டிடுவோம்

துளசிமணி மாலை அணிந்து 
சபரிமலை சென்றிடுவோம்


பனிமலையின் உச்சியிலே
பதினெட்டாம் படிதனிலே
பரிவுடன் அமைந்திருக்கும்
சாஸ்தாவே சரணம் என்று 


துளசிமணி மாலை அணிந்து 

சபரிமலை சென்றிடுவோம்


சதாசிவன் மகனின் பதாம்புஜம் பணிந்து
சதா அவன் நினைவில் மனமகிழ்ந்து


சதாசிவன் மகனின் பதாம்புஜம் பணிந்து
சதா அவன் நினைவில் மனமகிழ்ந்து

கணாதிபன் அந்த‌ விநாயகன் தம்பி
குணகரனை அனுதினம் நினைந்து


இணைபடியே நம்பி வந்து
ஐயன் இதயத்திலே நாம் கலந்து
பணிந்து மகிழ்ந்து கனிந்து
விரதமிருந்து இருமுடி சுமந்து
குருவடிவானவன் கருணையை அறிந்து
திருவருள் நிறைந்திடும் சன்னதி வந்திடவே


துளசிமணி மாலை அணிந்து 

சபரிமலை சென்றிடுவோம்

பவள‌ மணித் திருமார்பினிலே 
பந்தளராஜனின் ஆபரணம்
அவனியெல்லாம் போற்றிடவே 
அந்த‌ மணிகண்ட‌ குமரனின் அலங்காரம்

பவள‌ மணித் திருமார்பினிலே 
பந்தளராஜனின் ஆபரணம்
அவனியெல்லாம் போற்றிடவே 
அந்த‌ மணிகண்ட‌ குமரனின் அலங்காரம்

பலவினைகள் நீங்கிடவே 
பகவான் நாமம் பாடிடுவோம்

பலவினைகள் நீங்கிடவே 
பகவான் நாமம் பாடிடுவோம்
நம் கவலையெல்லாம் மறந்திடவே
கருணை மழையில் கூடிடுவோம்


துளசிமணி மாலை அணிந்து 

சபரிமலை சென்றிடுவோம்
தூயவனாம் ஐயப்பனின்
தரிசனமே கண்டிடுவோம்


துளசிமணி மாலை அணிந்து 

சபரிமலை சென்றிடுவோம்

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Durga Song Lyrics

Amman Devotional Songs Lyrics

.

Devi Devotional Songs Lyrics

.